January 19, 2025, 9:13 AM
25.7 C
Chennai

நிவாரண பொருள் கொடுக்கச் சென்ற போது… நெகிழ வைத்த ‘அம்மையார்’!

sevabharathi work1
கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்…

ஏப்ரல் 22 புதன்கிழமை… சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் நகரின் ஒரு பகுதியில் பெருமாள் கோயிலில் தினந்தோறும் பஜனை பாடல் பாடி வரும், குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஓர் அம்மாவிற்கு, 750 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை கொடுக்க சென்றோம்.

அதை வாங்குவதற்கு முன், அந்தம்மா நம்மிடம் ரூபாய் 1000 பணம் தந்தார். என்ன என்று கேட்ட போது …. இந்த மாதம் எனக்கு கிடைத்த OAP பென்ஷன் பணம் இது . இதை நிவாரணப் பணிக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

sevabharathi work3
கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்…

நாம் கூறினோம் …. உங்களுக்கே கஷ்டம் …! இந்த சூழ்நிலையில் …. வேண்டாம் … நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னோம் .

அதற்கு அவர், நீங்கள் இதைப் பெற்றுக் கொண்டால்தான் நான் நீங்கள் தரும் மளிகைப் பொருளை வாங்கிக் கொள்வேன் என்றார். மிகவும் பிடிவாதமாக பணத்தை நம்மிடம் தந்தார்.

மேலும் இந்த மாதிரி நல்ல செயலுக்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள் நானும் வரேன் என்றார். அந்த அம்மையாரின் பெயர் – இராமாநிதி.

ALSO READ:  பிராமணர்களின் உரிமைக் குரல்!
sevabharathi work
கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்…

நாம் அந்தப் பணத்தில் அந்தப் பகுதியில் கபசுர குடிநீர் கொடுக்க 500 ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதித் தொகையை அந்தத் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தோம்.

ஆத்தூரில் கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் கூறியது!

sevabharathi work2
கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்…

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.