சிலப்பதிகாரத்தை தமிழர் வாழ்வியல் களஞ்சியம் என்று பாகுபாடில்லாமல் தமிழர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். அத்தகைய தமிழர் வாழ்வியல் களஞ்சியத்தில், தமிழர் வாழ்க்கை நெறியை இவ்வாறு பாடியிருக்கிறார் இளங்கோவடிகள். இந்த நெறியின் அடிப்படையில் வாழ்க்கை நடத்தாதவர்கள் உண்மைத் தமிழராக இருக்க இயலாது.
தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின், புறஞ்சொல் போற்றன்மின்
ஊன் ஊண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்ம்மின், தவம் பல தாங்குமின் …
– தமிழர் வாழ்வியல் களஞ்சியமாம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லும் தமிழர்க்கான அடையாளத்துடன் கூடிய வாழ்க்கை அறநெறி!
பற்றுக! பின் பற்றுக! பின் பின்பற்றுக!