March 26, 2025, 11:27 PM
28.8 C
Chennai

நம்ம ஊரு சுற்றுலா: ஆத்துப்பாக்கம் சரசுவதி ஆலயம்

#ஆத்துப்பாக்கம் சரசுவதி கோயில் | படம்: சரசுவதி கோயில் மண்டபப் படிக்கட்டில் எங்கள் மாணவர்கள் குழு

5. ஆத்துப்பாக்கம் சரசுவதி ஆலயம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          பெரியபாளையம் கோவிலில் இருந்து வெளியில் வந்து பிரதான சாலையில் ஒரு தேநீர்க்கடையில் அனைவரும் தேநீர் அருந்தினோம். அப்போது மணி காலை 0830. ஆத்துப்பாக்கம் சரசுவதி கோயில் அங்கிருந்து திருப்பதி செல்லும் சாலையில் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிரதான சாலையில் இடது புறம் திரும்பி சிறிது தூரம் சென்றால் இந்தக் கோயிலைக் காணலாம். இது ஒரு தனியார் கோயில்.

          வடசென்னைப் பகுதிகளில் இருந்து, குறிப்பாக பெரம்பூர், மாதவரம் பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களுக்கு முன்னால் ஒரு வேனில் உணவுப் பொருட்கள், அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் மற்றொரு குழு செல்லும். பாதயாத்திரை வருபவர்களுக்கு காலை, மதியம், இரவு என உணவு அளிப்பது இவர்களின் பணி. இவ்வாறு யாத்திரிகர்களுக்கு சமைத்துப்போடும் ஒரு இடமாக இந்த சரசுவதி கோயில் இருந்திருக்கிறது.

          சமையல் செய்யத் தேவையான இடம், சுமார் 50 அல்லது 60 பேர் சாப்பிட ஒரு கூடம், கழிப்பறைகள், குளியலறைகள், தண்ணீர் வசதி அனைத்தும் இங்கே உள்ளது. அதோடு ஒரு சரசுவதி கோயிலும் இருக்கிறது. சரசுவதி சன்னிதிக்கு எதிரே சுமார் 50 பேர் அமர்ந்து பூஜை அபிஷேகங்களைக் காண ஒரு கல் மண்டபமும் கட்டியிருக்கிறார்கள். நான் அந்தக் கோயிலுக்கு மூன்று நான்கு முறை சென்றிருக்கிறேன்.  என்னுடன் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிலர் வருவார்கள். என் குடும்பத்தினரும் வருவார்கள். இரண்டு நாட்கள் முன்னதாக கோயிலுக்குச் சென்று நாங்கள் வரப்போவதைச் சொல்லி அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வோம். நைவேத்தியத்திற்கு இரண்டு வகை சாதம் பிரசாதமாகச் செய்யச் சொல்லுவோம்.

          அச்சமயத்தில் அங்கே ஒரு இளவயது அர்ச்சகர் இருந்தார். அந்த அத்துவானக் காட்டில் அவர் தனது மனைவி, கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். அருகில் வீடுகள் கிடையாது; வீடு, கடைகள் எல்லாம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால்தான் இருக்கும். இருந்தாலும் அந்த இளைஞர் கடவுளுக்குச் சேவை செய்து வந்தார்.

          நாங்கள் சென்றதும் கோயிலை சுத்தம் செய்வோம். கோயில் சுத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் வெட்ட வெளியில் இருப்பதால் தூசு, இலை தழைகள் சிதறிக்கிடக்கும். மாணவர்கள் ஆர்வமாக இந்த சுத்தம் செய்யும் வேலையைச் செய்வார்கள். அர்ச்சகர் அபிஷேகம் செய்யும்போது, சரசுவதி, அம்பாள் ஸ்லோகங்கள், பாடல்கள் எல்லாம் பாடுவோம். பூஜை முடிந்ததும் மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து அர்ச்சகர் ஆசீர்வாதம் செய்து பிரசாதம் தருவார். பள்ளியிறுதித் தேர்வில் நன்றாகத் தேர்வு எழுதுமாறு வாழ்த்துவார்.

          பின்னர் அனைவரும் அமர்ந்து சக்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாதம், புளிசாதம் போன்ற பிரசாதங்களை உண்போம். குளியலறை, கழிப்பறை எல்லாம் இருப்பதால் சவுகரியம். அர்ச்சகருக்கு சம்பாவனை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சிறுவாபுரி முருகனைத் தரிசிக்கச் சென்றோம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

பஞ்சாங்கம் – மார்ச் 26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: போராடித் தோற்ற குஜராத் அணி!

பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

பஞ்சாங்கம் – மார்ச் 26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: போராடித் தோற்ற குஜராத் அணி!

பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

எடப்பாடி தலைமையிலான அதிமுக., குழு தில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு!

தமிழகத்தில் NDA ஆட்சி அமைந்ததும் சாராய வெள்ளம் வடிந்துவிடும். இந்த சாராய வெள்ளமும் ஊழல்களும் முற்றிலும் நிறுத்தப்படும் -

மக்கள்தொகையாம்! தொகுதிக் குறைப்பாம்!! அட கழகமே… வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறதே!

2008ல் மாநில அரசு திமுக தானே ஸ்டாலின் அண்ணாச்சி ! நாங்களும் சொல்லுவோம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது Fair delimitation for south Tamilnadu

Entertainment News

Popular Categories