திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப கொடியேற்றம்!

Published:

தமிழ் கடவுள் முருகப் பெருமானின், ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடான, திருப் பரங்குன்றம், சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், மாதந்தோறும், திருவிழாக்கள் நடைபெறும்.

இவற்றில், முக்கிய திருவிழாவான, கார்த்திகை தீபத்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் 26 ஆம் தேதி, கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, திருப் பரங்குன்றம், மலைமேல் உள்ள, மோட்ச மண்டபத் தூணில், ஐந்தரை அடி உயரம் உள்ள, செப்புக் கொப்பரையில், சிவாச்சாரியர்களால், கார்த்திகை தீபம் தயார் செய்யப்பட்டு, மாலை 6 மணி அளவில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இன்று காலை, உத்ஸவர் சந்நிதியில், சுப்பிரமணிய ஸ்வாமி, தெய்வானை அம்மனுக்கு, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட, 16 வகைத் திரவியங்களால், அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர், கம்பத்தடி மண்டபத்தில் உள்ள, தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம், நடைபெற்றது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Related articles

Recent articles

spot_img