எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்; இங்கே 40 சதவீதம் பணிகள் கூட நிறைவு அடையவில்லை; மேட்டூர் அணை திறந்து விட்டு 47 நாள்கள் ஆகியும் காவிரியின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை… ரூ.5,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. அதிமுக., அரசு கோமா ஸ்டேஜில் உள்ளது. திமுக., ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் சரியாகும் என்று திருச்சி முக்கொம்பு பகுதியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.

