பம்பைக்கு செல்ல முயன்ற பெண்கள்; தடுத்து திருப்பி அனுப்பிய ஐயப்பன் படை!

பத்தனம்திட்ட: நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்ல முயலும் பெண்ணை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றார்கள் ஐயப்பப்படையினர்.

சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை மறித்து கேரள பெண்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஒரு தரப்பு பெண்கள் செல்ல மாட்டோம் என்றும், மற்றொரு தரப்பினர் சபரிமலை செல்வோம் என்றும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் பெண்களை அனுமதிக்க கேரள மக்கள், அங்குள்ள பாஜக.,வினர் விரும்பவில்லை. இருப்பினும் அரசு தரப்பில் பெண்களை அனுமதிக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிணரயி விஜயன் கூறியுள்ளார். இதனால் இரு தரப்பு மோதலாக இது உருவெடுத்துள்ளது.

சபரிமலை விவகாரத்தில் முதல்வர் பிணரயி விஜயன் கூறியபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோர மாட்டோம். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம். சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இந்நிலையில் மாதப் பிறப்பு நாளை ஒட்டி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. இதை ஒட்டி, பக்தர்கள் வரத் தொடங்கி உள்ளனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்னிட்டு, பெண் பக்தர்களும் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். ஆனால், நிலக்கல் பகுதியில் வந்து குவியும் அந்தப் பெண்களை கேரள பெண் பக்தர்கள் சிலர் அணுகி, அவர்களை மலைக்குச் செல்ல வேண்டாம் என வற்புறுத்தி வருகின்றனர்.

கார்கள், பஸ்கள் இவற்றில் எல்லாம் ஏறி, தேடித் தேடி வருகின்றனர். பெண்கள் எவராவது பஸ்ஸில் இருந்தால், அவர்களை கீழே இறக்கி விட்டு அதன் பின்னரே அரசு மற்றும் தனியார் பஸ்களை தொடர்ந்து செல்ல அந்தப் பெண்கள் அனுமதிக்கின்றனர்!

இதனிடையே செய்தி சேகரிப்பதற்காக வந்த கேரள ஊடகத்தைச் சேர்ந்த இளம் பெண்களையும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி, பம்பைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories