December 5, 2025, 8:27 PM
26.7 C
Chennai

கோயில்களை அழித்து சிவ லங்காவை புத்த லங்காவாக மாற்றி வரும் சிங்கள அரசு!

srilanka buddha - 2025

சிவ லங்காவை புத்தலங்காவாக மாற்ற முயற்சி!! இலங்கையில்- நாயாறு கிழக்கு செம்மலையில் உள்ள நிராவியடிபிள்ளையார் கோவிலில் புற்றுநோயில் மாண்டு போன சிங்கள பௌத்த பேரினவாத பிக்குவின் உடலை புதைக்க தடைசெய்து நீதிமன்றம் கடற்கரையில் புதைக்க ஆணையிட்டும் போக்கிரித் தனமாக கோயிலின்அருகில் புதைத்து,மகாவம்ச மனநிலையை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.

இதனை தட்டிக் கேட்ட வழக்குரைஞர்கள்,பொதுமக்களை சிங்கள காடையர்கள் தாக்கியிருக்கிறார்கள்.

யுத்த நிகழ்வுகளுக்கு பின்னர் இந்துத் தமிழர்கள் வழிபடும் திருக்கோயில்கள் வளாகங்களில் புத்தர் சிலைகளை அடாவடியாக வைத்து ஆக்கிரமிப்பு செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது.

சிவ லங்காவை “புத்த லங்கா”வாக மாற்றுவதற்கு மிகப் பெரிய சதி வேலை நடந்து வருகிறது. இந்தப் புத்தர் சிலையை கொண்டுவந்து புத்தவழிபாடு
மதத்தவர்கள் இந்துதமிழர்திருக்கோயில்களின் வளாகங்களில் மட்டுமே வைப்பார்கள். பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள். ஒருமசூதியிலோ, கிறிஸ்தவ திருச்சபை வளாகத்திலோ, இந்த புத்தர் சிலையை நிறுவ அஞ்சுவார்கள்.

srilanka buddha1 - 2025

இந்து திருக்கோயில் வளாகத்தில் இந்த பௌத்தர்களின் அடாத செயலை இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய இந்து தமிழர்கள் இதற்கு எதிரான கண்டனக் குரலை எழுப்பிட கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தமிழகத்தில் சாக்கியபௌத்தத்தை விதைக்க நினைக்கக்கூடிய பௌத்த கைக்கூலிகள் இந்த செயலுக்கு என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

” சமத்துவத்தின் அடையாளம்” அன்பின் மறு உருவம் என்றெல்லாம் உதட்டளவில் பேசி கோதம புத்தர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து விரோதிகள் என்ன சொல்ல போகிறார்கள். இந்துக் கோயில் வளாகத்தை ஆக்கிரமிக்கும் இந்த கோதம புத்தர் சிலை , நாளை தமிழக திருக்கோயில் வளாகங்களில் நிறுவப்பட்டு நம்முடைய திருக்கோயில்களும் பௌத்த மயமாகி நமது வழிபாட்டு முறை அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

srilanka buddha2 - 2025

எச்சரிக்கை உணர்வோடு ஒவ்வொரு இந்து தமிழனும் செயல்படவேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். உலகத் தமிழர் களுக்காக பாரதப் பிரதமர்மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக இது குறித்து இலங்கை அரசிடம் பேச வேண்டும் மேலும் யுத்த நிகழ்வுகளுக்குப் பிறகு அழிக்கப்பட்ட உடைக்கப்பட்ட இந்து தமிழர்களின் திருக்கோயில்கள் மீண்டும் கட்டியெழுப்ப இந்திய அரசு உதவிட வேண்டும்.

இந்துதமிழர்களின் திருக்கோயில் வளாகங்களில் நடைபெறக்கூடிய பௌத்த ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட தேவையான அழுத்தத்தை பாரத அரசு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  • இராம இரவிக்குமார் (தலைவர், இந்து தமிழர் கட்சி )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories