மசூதியை இடித்தது பாகிஸ்தான்! வலுக்கும் போராட்டம்!

masud - 2026

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள அஹமதியர்கள், வழிபடும் 70 ஆண்டு பழமையான மசூதி, அந்நாட்டின் பஞ்சாபில் உள்ளது.

இந்த மசூதியை எந்த அறிவிப்பும் இன்றி இடித்ததற்காக எதிர்ப்பு தெரிவித்து , அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

கடந்த 1974 ல் அஹமதி சமுதாயத்தினர், முஸ்லிம் இல்லை என பாகிஸ்தான் பார்லிமென்ட் அறிவித்தது.
பின்னர், அவர்கள் முஸ்லிம்கள் என அழைத்து கொள்வதை தடை செய்ததுடன், மத போதனை செய்யவும், யாத்ரீகர்களாக சவுதி செல்லவும் தடை விதித்தது.இந்நிலையில், பஹவல்பூர் மாவட்டம், ஹிசில்புர் கிராமத்தில் இருந்த, அஹமதியர்களின் வழிபாட்டு தளம் இடிக்கப்பட்டதாக , அந்த சமுதாயத்தின் செய்தி தொடர்பாளர் சலீமுதீன் கூறியுள்ளார்.

மேலும் அவர், ஹசில்புர் துணை கமிஷனர் தலைமையிலான காவல் அதிகாரிகள், நோட்டீஸ் எதுவும் அளிக்காமல் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை இடித்தனர். வழிபாடு நடந்த இடம், எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமானது. அவர்கள் தான் பல ஆண்டுகளாக நிர்வகித்தனர். இந்த இடிப்பு சம்பவத்தை படம் பிடித்த ஒருவரை , எந்தவொரு வழக்கும் இல்லாமல் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அஹமதி சமுதாயத்தினரை, பிரிவினைவாதிகள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர் என பல ஆண்டுகளாக அந்த சமுதாயத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாகிஸ்தானில் வசிக்கும் 22 கோடி பேரில் ஒரு கோடி பேர் முஸ்லீம் அல்லாதவர்கள். 2017 ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 லட்சம் பேர் ஹிந்துக்கள். 45 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும், சிந்து நகரப்பகுதி, பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் வசிக்கின்றனர். பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினர்களில் அஹமதியர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சி சமுதாயத்தினரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories