ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விட அதிபர் ஒபாமாவே அமெரிக்காவுக்கு ஆபத்தைத் தரக்கூடியவர் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்றில் ஒருவர் கருதுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக இம்மாதம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்காவிற்கு அதிக ஆபத்தைத் தரக்கூடிய நபர் யார் அல்லது நாடு எது என்ற கேள்விக்கு, 2809 நபர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அதில் சுமார் 1083 பேர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1059 பேர் குடியரசுக் கட்சியைச் சேர்நதவர்கள். இந்தக் கருத்துக் கணிப்பில் ஒபாமாவே அதிக அச்சுறுத்தல் தரக்கூடிய நபர் என குடியரசுக்கட்சியைச் சேர்நதவர்களில் 35 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
புடினை விட ஒபாமாவாலேயே அமெரிக்காவுக்கு ஆபத்து: கருத்துக் கணிப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

