டாக்கா வங்கதேசத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளை வலைதளத்தில் பதிவு செய்து வந்த வாஷிகுர் ரஹ்மான் மிஷுவை 3 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை நேற்று வெட்டிக் கொன்றது. தலைநகர் டாக்காவிலுள்ள தேஜ்காவ்ன் தொழிற்சாலைப் பகுதியில், கசாப்புக் கத்திகளைக் கொண்டு பட்டப்பகலில் அம்மூவரும் ரஹ்மான் மிஷுவை வெட்டிக் கொன்றனர். மதக் கோட்பாடுகள் குறித்த மிஷு வெளியிட்ட கருத்துகளுக்காகவே இந்தப் படுகொலை நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்ததற்காக வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 3-ஆவது நபர் வாஷிகுர் ரஹ்மான் மிஷு. இதற்கு முன்னர் 2 ஆண்டுகளுக்கு முன் ரஜீப் ஹைதர் என்பவரையும், கடந்த மாதம் அவிஜித் ராய் என்பவரையும் வலைதளக் கருத்துப் பதிவுகளுக்காக மத அடிப்படைவாதிகள் படுகொலை செய்தனர். அந்த இரு கொலைகளிலும் “அன்ஸாருல்லா வங்காளம்’ என்ற அமைப்புக்குத் தொடர்பு இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு: வங்கதேச வலைப்பதிவர் வெட்டிக் கொலை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

