கொழும்பு: இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குற்றஞ்சாட்டியுள்ளார். ‘நிதித்துறை அமைச்சக முன்னாள் செயலர் பி.பி.ஜெயசுந்தரத்திடம் நேற்று பல மணி நேரம் விசாரணை செய்துள்ளனர். அவர், தனது பதவிக் காலத்தில் எரிபொருள் ஒப்பந்தத்தின்போது முறைகேடு செய்து அரசுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அவர் மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று முன் தினம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பெட்ரோலிய கூட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசந்தா டி மெல்லும் விசாரணை செய்யப்பட்டுள்ளார். இப்படி பல வகைகளில் எனது ஆதரவாளர்களை திட்டமிட்டு புதிய அரசு பழிவாங்கி வருகிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை அரசு தன் ஆதரவாளர்களைப் பழிவாங்குகிறதாம்: ராஜபட்ச புலம்பல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari