December 6, 2025, 7:17 PM
26.8 C
Chennai

மோடியைச் சந்தித்த ராஜபட்ச : மனமாற்றமா? ராஜதந்திரமா?

modi rajapakshe - 2025

கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். நேற்றிரவு (வியாழக் கிழமை) இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடியை, ராஜபட்ச சந்தித்துப் பேசினார்.

நேற்று கொழும்பு சென்றடைந்த மோடியை விமான நிலையத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். இரு தினங்களும் இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது. பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தில் ராஜபட்சவை சந்திப்பது குறித்து திட்டமிடப்படவில்லை. என்றாலும் ராஜபட்சவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர், ராஜபட்சவின் ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடி இலங்கை வரும்போது கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கடந்த 2015-ல் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்ச படுதோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு இந்திய அரசே காரணம் என பகிரங்கமாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது கூற்றை மெய்ப் படுத்தும் விதமாக, மோடிக்கு எதிராக ராஜபட்சவின் ஆதரவாளர்களும் அவ்வப்போது, கொம்பு சீவிக் கொண்டிருந்தனர். மோடிக்கு எதிரான மனநிலையை ராஜபட்சவின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.
இருப்பினும் இந்த எதிர்ப்புக் குரலுக்கு திடீர் திருப்பமாக, அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு ராஜபட்ச அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டினார். மேலும் மோடி தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். அவரின் இத்தகைய மாற்றம், இலங்கை அரசியலில் மீண்டும் இந்தியத் துணையுடன் கோலோச்ச எடுக்கும் நடவடிக்கையா, அல்லது உண்மையான மனமாற்றம் தானா என்று பேச்சு எழுந்துள்ளது.

ஆனால், மோடியைப் பாராட்டிப் பேசிய நிலையில்தான், ராஜபட்சவை மோடி சந்தித்தார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories