சென்னை:
பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் வழக்கம் போல் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்று, தங்கள் திறமையை நிரூபித்தனர். மேலும் 1,813 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 292 அரசுப் பள்ளிகள் 100 சத தேர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளன.
புதுச்சேரியில் தேர்வு எழுதிய 15,583 பேரில் 13,508 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 5, 994 பேர். மாணவிகள் 7,514 பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 86.68 சதவிகிதம்.
தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரம்:
தமிழகம், புதுச்சேரியில் 92.1 சதவகித மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட 0.7 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மாணவர்களைவிட 5.2 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
94.5 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
89.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நகராட்சிப் பள்ளிகள் 87.20 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பழங்குடியினர் பள்ளிகள் 86.65 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 97.77 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த முறை முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது என்றும் கிரேடுமுறை பின்பற்றப்படும் என்றும் அரசு கூறியிருந்தது. அதன்படி, 1,180 மதிப்பெண்களுக்கு மேல் ஏ கிரேடு பெற்றனர்.
1,151- 1180 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பி கிரேடு பெற்றனர்.
1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு சி கிரேடு வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகள் 90.06 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.
ஆங்கிலோ இந்தியன் பாடப்பிரிவில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.06 சதவிகிதம்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86 சதவீதம் .
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் யாரும் 200 மதிப்பெண் எடுக்கவில்லை.
வேதியியல் பாடத்தில் 1123 பேரும், இயற்பியல் பாடத்தில் 187 பேரும், வணிகவியல் பாடத்தில் 8301 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 5597 பேரும், கணிதம் பாடத்தில் 3656 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இனி மாவட்ட வாரியாக தேர்ச்சி:
97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 33 மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 84 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 31,527 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 14,649 பேர். பெண்கள் 16,878 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 26.589 பேர். ஆண்கள் 11,658 பேர். பெண்கள் 14,931 பேர். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 84.33 சதவிகிதம். இதில் பெண்கள் 88.46 சதவிகிதம். ஆண்கள் 79.58 சதவிகிதம். 11,658 பேர் மாணவர்களும், 14,931 பேர் பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 0.30 சதவிகிதம் குறைவு.
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 42,066 பேரில் 36,076 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85/76 சதவிகிதம். இது கடந்த ஆண்டை விட 3.71 சதவிகிதம் குறைவு.
நெல்லை மாவட்டத்தில் +2 தேர்வில் 95.51% தேர்ச்சி . நெல்லை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 38,271 பேரில் 36,551 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.76% கூடுதலாகும். நெல்லை மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகள், 20 அரசு உதவி பெறும் பள்ளிகள், 58 மெட்ரிக் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் மாவட்டத்தில் 305 பள்ளிகள் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 15,934 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில், 96.77 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். கடந்த ஆண்டு 9வது இடத்திலிருந்து இம்முறை 2- ம் இடத்திற்கு ராமநாதபுரம் முன்னேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21,411 மாணவர்களில் 20468 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.44 சதவிகிதம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 92 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளர்.
தேனி மாவட்டத்தில் 14,918 பேர் தேர்வு எழுதினர். 14,311 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.93 சதவிகிதம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.11 சதவிகிதம். கடந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு .8 சதவிகிதம் அதிகம்.
கடலூர் மாவட்டத்தில் மந்தமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் 88 சதவிகிதம் தேர்ச்சி. அரியலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகள் விவரம். அரியலூர் சி.எஸ்.ஐ பள்ளி மாணவன் சதிஸ் குமார் 1176 மதிப்பெண். ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கஸ்தூரி 1176 மதிப்பெண். ஆலத்தியூர் வித்யா மத்தீர் பள்ளி மாணவி சந்தோஷினி 1175 மதிப்பெண். ஜெயங்கொண்டம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி அன்பு மலர் 1168.
சிவகங்கை மாவட்டம், தேர்வு எழுதியவர்கள் 16,670 பேர். தேர்ச்சியடைந்தவர்கள் 16,033 பேர். தேர்ச்சி விகிதம் 96.17 சதவிகிதம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.07 சதவிகிதம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 155 பள்ளிகளைச் சேர்ந்த 20,457 மாணவ, மாணவிகள் பேர் தேர்வு எழுதினர். கடந்த கல்வி ஆண்டில் மாவட்டத்தில் மொத்தமாக 93.01 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் 92. 16 சதவிகிதம் தேர்ச்சி. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தேர்வு எழுதிய பள்ளிகளில் 37 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
விருதுநகர் மாவட்டம் 97.85% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 199 பள்ளிகளில் பயின்ற 25,196 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். 24,654 பேர் தேர்ச்சி பெற்றனர்.
திண்டுக்கல் அரசு பள்ளி மாணவர்கள் 88.02 % சதவீதம் தேர்ச்சி.
கரூர் மாவட்டத்தில் 11,404 பேர் தேர்வு எழுதியதில், 10,829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கடந்த கல்வியாண்டில் 93.52 சதவிகிதத்தில் இருந்த தேர்ச்சி விகிதம் இந்த கல்வியாண்டில் 94.95 சதவிகிதமாக உயர்ந்து, 1.43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 104 பள்ளிகளில் 39 பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் தேர்வெழுதிய 24,497 பேரில் 19,677 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



