மோடியை மோசமாக சித்திரிக்கும் கூகுள் மீது உ.பி. போலீஸார் வழக்கு!

Published:

லக்னோ:
பிரதமர் மோடி குறித்து அவதூறு வெளியிட்டதாக ‘கூகுள்’ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலகின் முதல்நிலை இணைய தேடுபொறியான ‘கூகுளில்’ கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு அவதூறான தகவல்கள் வெளியானது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்ததால், அது நீக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நந்த் கிஷோர் என்ற வழக்குரைஞர் ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில், கூகுள் நிறுவனத்துக்கு எதிராக நேற்று புகார் அளித்தார். பிரதமர் மோடி குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட தவறான தகவல் தனக்கும், மற்றவர்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு கமல் கிஷோர் உறுதி செய்தார். ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், எனவே இது குறித்து எதையும் தெரிவிக்க முடியாது எனவும் கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img