இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் எனவும் அவர் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.