அன்று வேண்டுமென்றே… இன்று இயலாமையால்..! சீனா வைரஸ் பரவலுக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்!

trump and xi

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் மீண்டும் சீனா குறித்து ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். உலக அளவில் கொரோனா வைரஸால் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகி தடுமாறியிருக்கும் நாடு அமெரிக்கா. எனவே இந்த வைரஸ் தொடக்கம் குறித்து ஒவ்வொரு நாளும் டிரம்ப் சீனா குறித்து எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

சீனாவின் இயலாமையாலும் தகவலின்மையாலும்தான் உலக அளவில் பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கடந்த வருடம் சீனாவில் உயிரி ஆயுத பரிசோதனைக் கூடம் உள்ள வூஹான் நகரில் இருந்து வெளியே பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இன்று உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிர்களைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வருகிறது. இதுவரை 50.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 3.29 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது அமெரிக்கா. இங்கே கொரோனா தொற்றுக்கு 15.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 95 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 3.7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்றாலும் அதிக அளவிலான மரணங்கள் அமெரிக்காவில் மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் மீது பாய்ந்து வருகிறார் டிரம்ப். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பி விட்டது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது அமெரிக்கா. சீனா இதற்கு மறுப்பு தெரிவிக்கிறது என்றாலும், கோவிட் 19 என்பதை சீன வைரஸ் என்றே அமெரிக்கா இன்னமும் கூறி வருகிறது.

இந்நிலையில் இன்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து… ‛வேறொன்றும் இல்லை. சீனாவின் இயலாமையினால் உலக அளவில் இந்த பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன… அவர்களால் எளிதில் இதனைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சீனாவின் சார்பில் பேசிய அதன் தொடர்பாளர், முட்டாள்தனமாகப் பேசியுள்ளார். உலகம் முழுதும் அவர்களின் நாடு பரப்பி விட்டுள்ளதை வேண்டுமென்றே திசைதிருப்பி யுஎஸ் மற்றும் ஐரோப்பா மீது பிரசார தாக்குதலை நடத்துவது வலியை ஏற்படுத்துகிறது… என்று பதிவிட்டுள்ளார்!

https://twitter.com/realDonaldTrump/status/1263282490099326978

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories