கொழும்பு: இலங்கையின் பிரதமர் பதவியைக் குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபட்ச இயங்குகிறார் என்று கூறப்படுகிறது. அவர், தனது கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சி வேட்பாளராக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறாராம். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி போன நிலையில் தமது கட்சி வேட்பாளராகப் போட்டியிட தமக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால் கட்சி மாறி, இலங்கைத் தொழிலாளர் கட்சி வேட்பாளராக வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை தொழிலாளர் கட்சி தலைவற் ஏ.எஸ்.பி. லியாங்கேவுடன் ராஜபட்ச நடத்தியதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் இலங்கை பிரதமர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜபட்ச களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. 2 முறைக்கு மேல் அதிபர் பதவியில் ஒருவர் அமர முடியாது என்று அதிபர் ஆட்சி முறையில் திருத்தம் செய்வதால் அந்த வாய்ப்பு ராஜபட்சவுக்கு பறிபோகும். முன்னதாக ராஜபட்ச தனக்காகவே இந்த சட்டத்தில் சாதகமாக திருத்தம் கொண்டு வந்தார். புதிய அரசு அதை நீக்குகிறது. இந்நிலையில், அவர் பிரதமர் வேட்பாளராக முயற்சி செய்துவருகிறார் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் இல்லாவிடில் என்ன; பிரதமருக்கு போட்டியிடலாமே! ராஜபட்ச யோசனை!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

