நேபாளத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து எழுதிய பத்திரிகையாளர்… மர்ம மரணம்!

balram-bania-nepal
balram-bania-nepal

நேபாள எல்லையில், சீன ஆக்கிரமிப்பு குறித்து செய்திக் கட்டுரை எழுதிய நேபாள பத்திரிகையாளர் பால்ராம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்

கோர்கா மாவட்டத்தில் ருய் கிராமத்தில் சீன அத்துமீறல் குறித்து கட்டுரை எழுதிய நேபாள பத்திரிகையாளர் பல்ராம் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாண்டுவில் உள்ள நீர் மின் திட்ட பகுதிக்கு அருகிலுள்ள பாகமதி ஆற்றின் கரையில் பலராம் பனியா என அடையாளம் காணப்பட்ட 50 வயது பத்திரிகையாளரின் உடல் கண்டெடுக்கப் பட்டதாக ‘ஹிமாலயன் டைம்ஸ்’, மக்வான்பூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலக (டிபிஓ) செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.

பிம்பேடியில் உள்ள காவல் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு குழு அவரது உடலை ஆற்றில் இருந்து வெளியே கொண்டுவந்து ஹெட்டாடா மருத்துவமனைக்கு அனுப்பியது. பலியா கடைசியாக பால்கூ ஆற்றின் கரையில் நடந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இருப்பிடம், அவரது மொபைல் ஃபோனின் படி, அதையே காட்டியது! ஆனால் அதன் பிறகு தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் இவர் காணாமல் போனதாக ஒரு புகாரை போலீசில் அளித்திருந்தனர், அதைத் தொடர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு அமைக்கப் பட்டதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ தெரிவித்துள்ளது.

“அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பத்தின் படி, அவரது புகைப்படமும் இருந்தது. கண்டுபிடிக்கப்பட்ட உடல் பத்திரிகையாளர் பனியாவின் உடல் என்று சரிபார்க்கப்பட்டது,” என டிபிஓ தெரிவித்துள்ளது.

காத்மாண்டு போஸ்ட் செய்தியின் படி, பனியா நேபாள நாளிதழான காந்திபூர் டெய்லியுடன் தொடர்பில் இருந்தார். அவர் அரசியல், நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய ஆட்சி மற்றும் அதிகாரத்துவம் குறித்த விரிவான செய்திகளை அளித்து வந்துள்ளார்.

கோர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ருய் கிராமத்தில் சீன ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டி அவர் ஒரு கட்டுரை எழுதியதாகக் கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில், பல்வேறு ஊடகங்களிலும், சீனா நேபாள கிராமத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதன் இணைப்பை சட்டபூர்வமாக்குவதற்காக எல்லை போஸ்ட்களை அகற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ருய் கிராமத்தைத் தவிர, நேபாளம் முழுவதும் 11 இடங்களில் சீனா நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. சீனாவின் எல்லையான நேபாளத்தின் நான்கு மாவட்டங்களில் சுமார் 36 ஹெக்டேர் நிலம் சட்டவிரோதமாக சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நேபாள வெளியுறவு அமைச்சகம் (மோஃபா) கடந்த மாதம் எல்லைப் பிரச்னைகள் மற்றும் சீனாவின் சில பிரதேசங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது தொடர்பான ஊடக செய்திகள் தவறானவை என்றும், இந்த விஷயம் அதன் அதிகார எல்லைக்குள் வராது என்றும் கூறியது.

இமயமலையில் இந்திய பிராந்தியங்களான கலபாணி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை நேபாளம் சர்ச்சைக்குரிய புதிய அரசியல் வரைபடத்தில் இடம்பெறச் செய்த பின்னர் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ள சூழலில், சீன ஆக்கிரமிப்பு குறித்து கட்டுரை எழுதியவரின் மரணம் நிகழ்ந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories