அடிலெய்ட்: உலகக் கோப்பை காலிறுதியில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. அந்த அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்தில் திணறியது. 24 ரன்களில் முதல் 2 விக்கெட்களை இழந்ததால், அந்த அணி பின்னர் ரன் சேர்க்க முடியாமல் மெதுவாக ஆடியது. இருப்பினும் அமிர் சொஹெய்ல் 41 ரன்னும், மிஸ்பா உல் ஹக் 34 ரன்னும் எடுத்து கைகொடுத்தனர். இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் சரியாக விளையாடாததால், அந்த அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 213 ரன்களே எடுத்தது. 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, துவக்கத்தில் பின்ச்சின் விக்கெட்டை இழந்தது. பின்னர், வார்னர் 24 ரன்னும் க்ளார்க் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இருப்பினும் பின்னர் வந்த வாட்சன் துவக்கத்தில் தடுமாறியபோதும், பின்னர் சுதாரித்து விளையாடினார். ஸ்மித் அருமையாக விளையாடி 65 ரன் எடுத்து விளையாடினார். வாட்சனும் மேக்ஸ்வெல்லும் சேர்ந்து அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்னை எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதை அடுத்து, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன.
ஆஸ்திரேலியா அபாரம்; பாகிஸ்தான் பரிதாபம்: அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

