மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோரே உதவாதீர்கள்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவுறுத்தல்

Published:

cheating-in-exams-biharபாட்னா: பீகாரில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் கட்டத்தின் மீது ஏறி நின்று, ஜன்னல்கள் வழியாக பிட்களை உள்ளே எரிந்தும், புத்தகங்களின் பேப்பர்களை உள்ளே வீசியும் மாணவர்கள் தேர்வு எழுத உதவுகின்றனர். இந்நிலையில் இது குறித்த செய்தி இன்று காலை வெளியானது. இதைக் கண்டு, வருத்தப் பட்டு, பெற்றோரே மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்ய உதவ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார். “மாணவர்கள் இந்தத் தேர்வு முடிவில் வழங்கப்படும் சான்றிதழ்களைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் போவதில்ல, ஆனால் அவர்களின் திறமையை வைத்தே முன்னேற்றம் காண்பர்” என்று வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்ற மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பின்னர் தன் பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிட்ட நிதிஷ் குமார், பீகாரில் இருந்து செல்லும் மாணவர்கள் மிகவும் திறமை சாலிகள், உலகம் முழுதும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், சில புகைப்படங்கள் அவர்களது தகுதி குறித்து குறைவாக வெளிப்படுத்தி, முறைகேட்டில் ஈடுபடுபவர்களாகக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img