பாட்னா: பீகாரில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் கட்டத்தின் மீது ஏறி நின்று, ஜன்னல்கள் வழியாக பிட்களை உள்ளே எரிந்தும், புத்தகங்களின் பேப்பர்களை உள்ளே வீசியும் மாணவர்கள் தேர்வு எழுத உதவுகின்றனர். இந்நிலையில் இது குறித்த செய்தி இன்று காலை வெளியானது. இதைக் கண்டு, வருத்தப் பட்டு, பெற்றோரே மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்ய உதவ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார். “மாணவர்கள் இந்தத் தேர்வு முடிவில் வழங்கப்படும் சான்றிதழ்களைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் போவதில்ல, ஆனால் அவர்களின் திறமையை வைத்தே முன்னேற்றம் காண்பர்” என்று வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்ற மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பின்னர் தன் பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிட்ட நிதிஷ் குமார், பீகாரில் இருந்து செல்லும் மாணவர்கள் மிகவும் திறமை சாலிகள், உலகம் முழுதும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், சில புகைப்படங்கள் அவர்களது தகுதி குறித்து குறைவாக வெளிப்படுத்தி, முறைகேட்டில் ஈடுபடுபவர்களாகக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் காப்பி அடிக்க பெற்றோரே உதவாதீர்கள்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவுறுத்தல்
Popular Categories


