January 23, 2025, 6:10 AM
23.2 C
Chennai

ரோஹித், ஜடேஜாவுக்குப் பின் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து தோனி கருத்து!

dhoni உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதலில் ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோருக்கு அடித்த படியாக், இப்போது, விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும் இந்திய கேட்பன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சதம் அடித்த விராட் கோலி, அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரது தடுமாற்றம் குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறிய போது… விராட் கோலியின் பேட்டிங் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். அதற்காக அவர் களம் இறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்க வேண்டும் என்று நினைப்பது இயலாத செயல். டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை வைத்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய உலகக் கோப்பைத் தொடரில் அவர் அவுட்டான ஆட்டங்களில் மோசமான ஷாட்டுகளை அவர் தேர்வு செய்ததாக நான் கருதவில்லை. மிகச் சரியான் விளாசல் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் விராட் கோலி. பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிப்பார்கள். அதேபோல் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன் என்றார் தோனி.

ALSO READ:  வங்கதேசத்தில் இஸ்கான் செயலர் கிருஷ்ணதாஸ் கைது; இந்தியாவில் வலுக்கும் கண்டனங்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.