உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதலில் ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோருக்கு அடித்த படியாக், இப்போது, விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும் இந்திய கேட்பன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சதம் அடித்த விராட் கோலி, அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரது தடுமாற்றம் குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறிய போது… விராட் கோலியின் பேட்டிங் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். அதற்காக அவர் களம் இறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்க வேண்டும் என்று நினைப்பது இயலாத செயல். டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை வைத்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய உலகக் கோப்பைத் தொடரில் அவர் அவுட்டான ஆட்டங்களில் மோசமான ஷாட்டுகளை அவர் தேர்வு செய்ததாக நான் கருதவில்லை. மிகச் சரியான் விளாசல் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் விராட் கோலி. பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிப்பார்கள். அதேபோல் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன் என்றார் தோனி.
ரோஹித், ஜடேஜாவுக்குப் பின் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து தோனி கருத்து!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari