சச்சின் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை: ரூ.6 லட்சத்துக்கு ஏலம்

Published:

sachin-dressஜோத்புர்: சச்சின் டெண்டுல்கர் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை ரூ.6 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு முன்னதாக், அவர் கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அது அவரது 200-வது டெஸ்ட் போட்டியாகும். அவருக்கு பிரிவு உபசாரமாக நடைபெற்ற அந்த டெஸ்க் போட்டியில் அவர் பயன்படுத்திய சிறப்பு வாய்ந்த உடை சனிக்கிழமை இரவு ஜோத்பூரில் ஏலம் விடப்பட்டது. அந்த உடையை ரூ.6 லட்சத்துக்கு, ஜோத்பூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஷிவ் ராஜ்சிங் என்பவர் வாங்கினார். இதேபோல் மேலும் பல நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை அறக்கட்டளைக்கு ஒன்றுக்கு வழங்கப்பட்டது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img