பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்!

Published:

246rt65o_james-bond-actor-sir-sean-connery-650_625x300_31_October_20
பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்.

பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சீன் கானரி காலமானார்.

ஸ்காடிஷ் நடிகர், ஜேம்ஸ்பாண்ட் புகழ் சீன் கானரி 90 வயதில் சனிக்கிழமையன்று காலமானார். உலகளவில் மிகவும் புகழ் பெற்ற ஜேம்ஸ்பாண்ட் தொடரைச் சேர்ந்த ஏழு படங்களில் சீன் கானரி நடித்துள்ளார்.

முதல் முறையாக 1962 ல் வெளிவந்த பாண்ட் தொடர்கள் ‘டா நோ’ திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்டாக நடித்தார். அதன்பிறகு 1963 ல் வந்த ஃப்ரம் ரஷ்யா வித் லவ்,
1964 ல் வந்த கோல்டு ஃபிங்கர், 1965 ல் வந்த தண்டராபால், 1967 ல் வந்த யூ ஒன்லி லிவ் ட்வைஸ், 1971 ல் வந்த டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர், 1983 ல் வந்த நெவர் சே நெவர் எகைன் போன்ற வரிசையான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் அவர் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார்.

1987ல் வந்த தி அன்டசபுல்ஸ் படத்தில் ஐரிஷ் போலீஸ் பாத்திரத்தில் நடித்ததற்காக சீன் கானரிக்கு ஆஸ்கார் அவார்ட் கிடைத்தது.

அதே போல் பல படங்களில் நடிப்பிற்கு இருமுறை கோல்டன் குளோப்ஸ் அவார்டோடு கூட இருமுறை பாஷ்டா அவார்டுகளும் பெற்றார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சீன் கானரி, தன்னுடைய நடிப்பு பயணத்தில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற படங்களோடு கூட பல கமர்ஷியல் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகராக உயர்ந்த இடத்தை பிடித்த சீன் கானரியின் இளமைப் பருவம் மிகவும் பரிதாபமான சூழ்நிலையிலேயே கழிந்தது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்கில் மிக மிக ஏழ்மையில் அவர் வளர்ந்தார். முதலில் இறந்த உடல்களை வைக்கும் பெட்டியை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டார். அதன்பிறகு பால் வியாபாரியாக, நீச்சல் குளத்தில் லைஃப் கார்டாக பணிபுரிந்தார்.

அதன் பிறகு பாடிபில்டிங் மீது பார்வையை செலுத்தினார். அதுவே அவருடைய திரைப் பயணத்திற்கு பாதை வகுத்தது. மிகச்சிறு காலத்திலேயே ஹாலிவுட்டில் நல்ல பெயரும் புகழும் பெற்றார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மட்டும் இன்றி புகழ்பெற்ற இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கத்தில் வந்த மார்னி (1964), கேண்டிஸ் பெர்ஜின் இயக்கத்தில் வந்த தி விண்ட் அண்ட் லயன் (1975), ஜூன் ஹூஸ்டன் இயக்கத்தில் வந்த தி மேன் ஹூ வுட் பி கிங் (1975), ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் வந்த இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ரூசேட் (1989), மற்றும் பல படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img