December 5, 2025, 1:15 PM
26.9 C
Chennai

ஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்!

joe-biden-and-kamala-harris
joe-biden-and-kamala-harris

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.

அப்போது அவர், அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெளிவான முடிவை அளித்துள்ளனர் என்றார். தாம், அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கைக்குரியவனாக செயல்படுவேன். மக்களை பிரித்தாளும் அதிபராக இருக்க மாட்டேன்- அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்று உறுதி அளித்தார்.

அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர மக்களுக்கு பாலமாக இருப்பேன் என்று கூறிய அவர், கோவிட் முடக்க காலத்தில் பெருந்திரளாக வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றார்.

துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுவார் என்று குறிப்பிட்ட அவர், தென்னாசியாவில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் உயர் பதவியை அடைந்துள்ளார் கமலா ஹாரிஸ் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எனது குடும்பத்தின் அன்பு, ஆதரவு இல்லாமல் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியாது என்ற ஜோ பிடன், கருப்பின மக்களை அரவணைத்து செல்வோம் என்றார்.

டிரம்ப்புக்கு வாக்களித்தவர்கள் எதிரிகள் அல்லர் அவர்களும் அமெரிக்கர்கள்தான். எனக்கு வாக்களிக்காத போதும் அவர்களின் நலனுக்காகவும் உழைப்பேன் என்று ஜோ பிடன் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் அமெரிக்காவின் நற்பெயரை உயர்த்துவோம். சர்வதேச அளவில் அமைதி நிலவ பாடுபடுவேன் என்று தனது எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்தினார் ஜோ பிடன்.

அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய போது, வெற்றிக்காக உழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கின்றனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள். கருப்பின பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் சம உரிமை நிலைநாட்டப்படும் என்று கூறினார் கமலா ஹாரிஸ்.

அமெரிக்க மக்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். 55 ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கும் உரிமை பெற்ற பெண்கள் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளனர். அதிபர் தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளோம். ஒபாமா வழியில் அமெரிக்கா நலனுக்காக செயல்படுவேன் என்று உறுதி கூறினார் கமலா ஹாரிஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories