கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், தமிழர்களிடமிருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிப்பதில் முதல் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 425 ஏக்கர் நிலத்தை அதிபர் மைத்ரீபால சிறீசேன நேற்று தமிழர்களிடம் ஒப்படைத்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் வழங்கினார். அப்போது அவர், எனது ஆட்சியில் இனம், மத அடிப்படையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், போரில் அழிந்த வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.
இலங்கையில் தமிழர் நிலங்கள் முதல்கட்டமாக ஒப்படைப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

