ஓங்கும் ராஜபட்ச கரம்; தவிக்கும் சிறீசேன! ஈழ எல்லை சுருங்கிவிட்டதாக மகிந்த மமதைப் பேச்சு!

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் கட்சி பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராஜபட்சவுக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அந்த மமதையில் மகிந்த ராஜபட்ச, ஈழ பிராந்தியத்தின் எல்லை சுருங்கிவிட்டதாக கேலி பேசியுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மகிந்த ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது. இதை அடுத்து இலங்கை அரசியலில் ராஜபட்சவின் கை ஓங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிபர் மைத்ரீபால சிறீசேன ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபட்ச, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும். இலங்கையின் வரலாற்றில் ஆளும் கட்சிகளை எதிர்க் கட்சியானது உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த முதல் வரலாறு நிகழ்ந்திருக்கிறது என்று கூறியுள்ளார். அப்போது, இலங்கைத் தேர்தல் முடிவுகளை வெளியிட்ட பத்திரிகை ஒன்றைக் காட்டி, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் எமது கட்சியின் அரக்கு நிறம்தான் இருக்கிறது. ஈழ பிராந்தியம் என்பதுகூட சுருங்கிப் போய்விட்டது என கேலியாகச் சொல்லியுள்ளார்.

தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பரவலாக வெற்றி கிடைத்துள்ளது. இலங்கை அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது பெரிய கட்சியாக தற்போதும் திகழ்ந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories