திட்டமிட்டே ஹிந்து கோயிலை இடித்தார்கள்! இலங்கையில் அதிர்ச்சி!

mirusuvil pillaiyar koil2 - 2026

இலங்கையில், மிருசுவிலில் திட்டமிட்டே சைவக் கோயிலை இடித்தார்கள் என்று திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார் இலங்கை சிவசேனையின் மறவன்புலவு க சச்சிதானந்தன்!

இது குறித்து ஒரு வீடியோ வைரலானது. அதில், வெகு நேரமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் வாகனம் ஒன்று, திடீரென கிளம்பி கோயிலின் மீது மோதி உடைத்து விட்டு, பின் அங்கிருந்து மெதுவாகக் கிளம்பிச் செல்கிறது. இந்தக் காட்சிகள் அங்குள்ள ஒரு சிசிடிவி காமெராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் மிருசுவில் தெற்கு யா/336 நிலதாரிப் பிரிவில்
கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் கண்டி வீதி ஓரத்தில் அமைந்த அருள்மிகு  பிள்ளையார் திருக்கோயிலை வைகாசி 25ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 8 6 2021 அன்று அதிகாலை 4-5 மணியளவில் பார வண்டியால் உடைத்துள்ளனர்… என்கிறார் க.சச்சிதானந்தன்.

mirusuvil pillaiyar koil - 2026

மிருசுவில் தெற்கு நிலதாரி பிரிவில் முகமதியர் வாழ்வதில்லை; 
பௌத்தர்கள் வாழ்வதில்லை; 169 கிறித்தவர்கள் வாழ்கிறார்கள்;
600 சைவர்கள் வாழ்கிறார்கள் … இங்கு மொத்த மக்கள்தொகை 769.

பிரதேச செயலகத்தில் பதிவு செய்த ஒரே திருக்கோயில் ஆயத்தடிப் பிள்ளையார் கோயில் மட்டுமே. பிரதேச செயலகத்தில் கிறிஸ்தவ வழிபாட்டிற்கும் கெற்பேலி கிழக்கு மாதா கோயில் 
மிருசுவில் நிக்கொலஸ் தேவாலயம் பதிந்து உள்ளனர்.

தென்மராட்சி பிரதேச செயலகப்பிரிவில் 70,743 மக்கள் தொகை. இதில், 66,888 சைவர்கள், 267 புத்தர்கள் 3192 கிறித்தவர்கள்,
396 முகமதியர்கள். இந்தச் சூழ்நிலையில் கண்டி வீதிக்கு அருகில் இருந்த அருள்மிகு பிள்ளையார் திருக்கோயிலை உடைத்துள்ளனர்.

சைவக் கோயில்களை இடிக்கலாம் உடைக்கலாம் அழிக்கலாம் என இந்தத் தீவில் வாழ்கின்ற பௌத்தர்கள் நினைக்கிறார்கள்
கிறித்தவர்கள் நினைக்கிறார்கள் முகம்மதியர்கள் நினைக்கிறார்கள்.

mirusuvil pillaiyar koil1 - 2026

தம் நினைப்புக்குச் செயல்வடிவம் கொடுத்துச் சைவத் திருக்கோயில்கள் இடித்து உடைத்து அழிப்பதால் சைவத் தமிழ் மக்களின் நெஞ்சங்கள் புண்ணாகின்றன. சைவத் தமிழர்கள் கண்களில் நீர் புரண்டு ஓடுகிறது. சைவத் தமிழ் இளைஞர்கள் கொதித்த உணர்வுகளை அடக்கி வாளாவிருக்கின்றனர்.

அடுத்து என்ன செய்யலாம்? சைவக் கோயில்களை இடித்து உடைத்து அழிப்போரின் சவால்களை எவ்வாறு சந்திக்கலாம்? என்பது சைவத் தமிழ் இளைஞர்களின் நெஞ்சத்தில் எழுகின்ற வினா.

பாணந்துறை அருள்மிகு முருகன் கோயிலில் கொடி மரத்துக்கு அருகே  அக்கோயிலின் சிவாச்சாரியாரை உயிரோடு கொளுத்திய நிகழ்ச்சியே பிரபாகரனை உருவாக்கியது என்பதை மதக் கலவரங்களை தூண்டுவோர் மறந்து விடுகிறார்கள்.

இந்தத் தீவில் மதக் கலவரங்களை உருவாக்க வேண்டும் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும் வறுமை தாண்டவம் ஆட வேண்டும் ஏழ்மையைக் காரணமாக்கி மக்கள் சேவை என்ற போர்வையில் மதமாற்றங்களைத் தொடர வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் உள்ளவர்களே மிருசுவில் தெற்கில் கண்டி வீதிக்கு அருகில் அமைந்திருந்த அருள்மிகு பிள்ளையார் திருக்கோயிலை அடித்து உடைத்து நொறுக்கி உள்ளார்கள்… என்று தெரிவித்துள்ளார் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories