தனியார் பள்ளி கட்டணம்: கொடுத்தா வாங்கிக்கோங்க.. நிர்பந்திங்காதீங்க: கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

chennai court

பெற்றோர் விருப்பப்பட்டால் கல்விக் கட்டணத்தை செலுத்த எந்த தடையும் இல்லை என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய கல்வி நிலையங்கள் அனைத்தும் எப்போது மீண்டும் திறக்கும் எனத் தெரிக்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவு தொடர்வதாலும், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேசமயம் பல தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசு மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதோடு, ஆசிரியர்கள் ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கச் சொல்லி பல பள்ளிகலும் உத்தரவிட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டாமா எனவும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு ஜூன் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன், தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதேசமயம் பெற்றோர் விருப்பப்பட்டால் பள்ளி கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கு ஏற்கனவே 248 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதால், அதை பயன்படுத்தி அடுத்த சில மாதங்களுக்கு தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசு வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட பின் பேசிய நீதிபதி ஆர். மகாதேவன், கட்டணம் தொடர்பாக திட்டம் வகுக்கக் கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கலாம் என வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories