December 8, 2025, 5:58 PM
28.2 C
Chennai

தனியார் பள்ளி கட்டணம்: கொடுத்தா வாங்கிக்கோங்க.. நிர்பந்திங்காதீங்க: கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

chennai court

பெற்றோர் விருப்பப்பட்டால் கல்விக் கட்டணத்தை செலுத்த எந்த தடையும் இல்லை என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய கல்வி நிலையங்கள் அனைத்தும் எப்போது மீண்டும் திறக்கும் எனத் தெரிக்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவு தொடர்வதாலும், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேசமயம் பல தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசு மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதோடு, ஆசிரியர்கள் ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கச் சொல்லி பல பள்ளிகலும் உத்தரவிட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டாமா எனவும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு ஜூன் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன், தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதேசமயம் பெற்றோர் விருப்பப்பட்டால் பள்ளி கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கு ஏற்கனவே 248 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதால், அதை பயன்படுத்தி அடுத்த சில மாதங்களுக்கு தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசு வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட பின் பேசிய நீதிபதி ஆர். மகாதேவன், கட்டணம் தொடர்பாக திட்டம் வகுக்கக் கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கலாம் என வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories