December 5, 2025, 3:47 PM
27.9 C
Chennai

ஆஸி.,க்கு எதிராக… டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!

natarajan
natarajan

சிட்னியில் நடந்த 2வது ‘டி-20’ போட்டியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி போட்டியையும் தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் அசத்தியது இந்திய அணி. இன்று, சிட்னியில் நடந்த இரண்டாவது போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், மாத்யூ வேட், ஷார்ட் ஜோடி ரன் வேட்டையைத் தொடங்கியது. வேகமாக ரன்கள் சேர்த்த வேட் 25 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து 32 பந்தில் 58 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மேக்ஸ்வெல் 22 ரன், ஸ்மித் 46, ஹென்ரிக்ஸ் 26 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழந்து 194 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் நடராஜன் 2, சகால் 1, ஷர்துல் தாகூர் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

indianteam-t20

கடின இலக்கை நோக்கி துரத்திய இந்திய அணியில், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. ராகுல் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர், ஷிகர் தவான், கோலி இருவரும் வேகமாக ரன்கள் சேர்த்தனர். 35வது பந்தில் அரைசதம் அடித்த தவான், 52 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சாம்சன் 15 ரன் எடுத்தும், கோலி 40 ரன் எடுத்தும் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கேள்விக் குறியானது.

பின்னர் வந்த பாண்ட்யா அடித்து ஆடி நம்பிக்கை அளித்தார். கடைசி ஓவரில் இந்தியா வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது, கடைசி ஓவரில் 2 சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு ‘திரில்’ வெற்றி தேடித் தந்தார் பாண்ட்யா. அவர் 42 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். , ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை அடுத்து இந்திய அணி 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நடராஜனின் துல்லிய பந்துவீச்சை புகழந்தார் பாண்ட்யா. நடராஜனின் துல்லிய பந்துவீச்சால் பத்து ரன்கள் வரை குறைவாக ஆஸி. அணி எடுத்தது. நமது சேஸிங் டார்கெட்டும் பத்து ரன்கள் வரை குறைந்திருந்தது என்று குறிப்பிட்டார் பாண்ட்யா. அவரே ஆட்டநாயகன் விருது பெற்றார்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து டி-20′ தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. முன்னதாக, ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸி பெற்ற வெற்றிக்கு பழி தீர்க்கும் வகையில் டி 20தொடரை இந்தியா கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories