காதலன் வந்ததை கணவனிடம் கூறிய மகன்! வாயில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தாய்!

Published:

Anastasiya - 2026

ரஷ்யாவில் கணவரிடம் தன் காதலனை பற்றி கூறியதால் பெற்ற மகனை பெற்றோல் ஊற்றி எரித்த கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் வசிக்கும் Anastasiya (31) என்ற பெண் ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றுகிறார். இவரது கணவர் Pavel Baulin (35). இவர்களது மகன் Andrey தன் தந்தையிடம் அம்மாவைப் பார்ப்பதற்காக அவரின் காதலர் ஒருவர் வந்தார் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த Anastasiya, தன் மகன் மீது பெட்ரோல் ஊற்றியதோடு அவன் வாயிலும் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்திருக்கிறார்.

Pavel Baulin Andrey - 2026

இதனால் உடல் முழுவதும் தீ பற்றி எரிய அலறியடித்து ஓடியுள்ளார் Andrey. இதனைக்கண்ட அவரின் சகோதரி பதறியடித்து ஓடி வந்து நெருப்பை அணைத்து தம்பியை காப்பாற்றியுள்ளார்.

எனினும் அவரின் உடலில் பெரும்பாலான பகுதி எரிந்துவிட்டது. அதன்பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Andrey இரண்டு நாட்களில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட Anastasiyaவிற்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img