December 5, 2025, 8:54 PM
26.7 C
Chennai

யூரோ 2021: ஆறாவது நாளில் அசத்திய இத்தாலி!

euro cup 2021
euro cup 2021

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

6வது நாளில்… மூன்று ஆட்டங்கள் நடந்துள்ளன. இன்றைய போட்டிகள்
(1) பின்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான குரூப் பி போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் 16.06.2021 அன்று மாலை இந்திய நேரப்படி 18.30 மணிக்கு நடந்தது.
(2) குரூப் ஏ ஆட்டம் துருக்கிக்கும் வேல்ஸுக்கும் இடையில் 16.06.2021 அன்று இந்திய நேரப்படி இரவு 2130 மணிக்கு பாகு நகரில் நடந்தது.
(3) குரூப் ஏ போட்டி, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து இடையே 17.06.2021 அன்று 0030 மணிக்கு ரோமில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் எஃப் என மொத்தம் ஆறு குழுக்கள் உள்ளன. மற்றும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் உள்ளன. குழுவிற்குள் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக ஒரு ஆட்டம் விளையாட வேண்டும்.

அனைத்து குழுக்களிலும் உள்ள அனைத்து அணிகளும் நேற்று வரை ஒரு விளையாட்டை விளையாடியுள்ளன. அவற்றின் இரண்டாவது விளையாட்டு வரிசை இன்று முதல் தொடங்குகிறது.

பின்லாந்து vs ரஷ்யா

euro finland russia
euro finland russia

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் 24,540 பேர் கலந்து கொண்ட குரூப் பி விளையாட்டு இது. அலெக்ஸி மிரான்சூக்கின் ஒரு அற்புதமான கோலால் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்யாவுக்கு முதல் வெற்றி கிடைத்தது, பின்லாந்திற்கு பி-குழுவில் இரண்டாவது வெற்றி கிடைக்கவில்லை.

சென்ற போட்டியில் எதிரணியின் எரிக்சன் மாரடைப்பு ஏற்பட்டு வெளியேறியபோதும் பின்லாந்து வென்றது நினைவிருக்கலாம். உண்மையில், பின்லாந்து அணியின் ஜோயல் பொஜ்ஜன்பாலோ மூன்று நிமிடங்களுக்குள் ஒரு கோலடித்தார். ஆனால் அந்த கோல் VARஆல் மறுக்கப்பட்டது. முதல் பாதி முழுவதும் ரஷ்யா தங்கள் அழுத்தத்தைத் தந்துகொண்டே இருந்தது.

முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் (47ஆவது நிமிடத்தில்) மிரான்சுக் அழகான ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் பின்லாந்து சிறப்பாக ஆடியது. ரஷ்யாவும் நன்றாக ஆடியது. ரிஃபாத் ஜெமலெட்டினோவ் மற்றும் டேலர் குசியாவ் இருவரும் கோலுக்கு நெருக்கமாகச் சென்றனர்.

இந்த 1-0 வெற்றிக்குப் பின்னர் ரஷ்யா இப்போது குழு B இல் மூன்று புள்ளிகளோடு பெல்ஜியம் மற்றும் பின்லாந்து அணிகளுடன் இணைகிறது, பின்லாந்து மேலே இரண்டாவது இடத்தில் உள்ளது.

துருக்கி Vs வேல்ஸ்

euro turkey wales
euro turkey wales

பாகு நகரில் துருக்கியை வீழ்த்த ஒரு அற்புதமான ஆட்ட்த்திறனை வெளிப்படுத்தியதால் இந்தப் போட்டியில் நாக் அவுட் கட்டத்தை நோக்கி வேல்ஸ் செல்கிறது எனச் சொல்லலாம். ஆரோன் ராம்சே அரை நேரத்திற்கு சற்று முன்னதாக ஸ்கோர் கணக்கை ஆரம்பித்தார். ஏற்கனவே இரண்டு நல்ல வாய்ப்புகளை அவர் கோலாக்க முடியவில்லை. கரேத் பேலுடன் இணைந்து அவர் அற்புதமாக ஆடினார்.

இரண்டாவது பாதியில் பெனால்டியில் பேல் ஒரு கோல் அடிக்க முற்பட்டார். வேல்ஸ் இறுதியாக வெற்றியை 95ஆவது நிமிடத்தில் பேல் அடித்த டீட்-அப் கார்னர் ஷாட் ராபர்ட்ஸிடம் சென்று, அவர் அதனை ஒரு கோலாக்கினார்.

இறுதி நிமிடங்களில் ஒரு சச்சரவு ஏற்பட்டது. இதனால் மூன்று வீரர்களுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது, இரண்டு வேல்ஸ் வீரர்கள் மற்றும் ஒரு துருக்கி வீரருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இவ்வாறாக வேல்ஸ் துருக்கியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இந்த வெற்றி, அடுத்த ஆட்டமான இத்தாலி சுவிட்சர்லாந்து வரை வேல்ஸை குழு A இன் முதலிடத்திற்கு அனுப்புகிறது, மேலும் கடைசி -16க்கான இடத்தை அவர்கள் பெறுவதில் சிக்கல் எதுவும் இல்லை. குறைந்தபட்சம் வேல்ஸ் அணி மூன்றாம் இடத்தையாவது பிடிக்கும்.

இத்தாலி vs சுவிட்சர்லாந்து

euro italy swiz
euro italy swiz

மீண்டும், இத்தாலி சாதித்திருக்கின்றது. இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் முதல் ஆட்டத்தை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிறகு, இத்தாலிய அணியின் மேலாளரான ராபர்டோ மான்சினியிடம் எவரேனும் அஸ்ஸூரியின் திறமை பற்றிக் கேட்டால் சுட்டிக்காட்ட அந்த அணி ஒரு ஜோடி வெற்றிகளை தற்போது பெற்றுள்ளது.

அஸ்ஸூரி என்றால் நீல ஜெர்சியில் விளையாடும் இத்தாலிய கால்பந்து அணி. சுவிட்சர்லாந்திற்கு எதிரான இந்த வெற்றி மானுவல் லோகடெல்லியின் இரண்டு சிறந்த கோல்கள் மற்றும் கடைசி நேரத்தில் சிரோ இம்மொபைல் அடித்த ஒரு கோலால் சாத்தியமானது.

கடந்த 10 ஆட்டங்களில் அதாவது 965 நிமிடங்களில் இத்தாலிய கோல்கீப்பரான கியான்லூகி டோனாரும்மா எதிரணியினரை ஒரு கோல் கூட அடிக்கவிடவில்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் இத்தாலிக்கு எதிராக கோலடிக்கப்பட்டது. அதன் பின்னர் இதுவரை கோல் அடிக்கப்படவில்லை. அந்த ஆட்டத்திற்குப் பிறகு இத்தாலி அணி 31 கோல்கள் அடித்துள்ளனர். ஒரு போட்டியின் இறுதிக்கட்ட ஆட்டத்தில் தொடர்ந்து இரு போட்டிகளில் இத்தாலி அணி எடுத்ததில்லை.

அவர்கள் இப்போது ஒரு வார இடைவெளியில் அவ்வாறு இரண்டு முறை செய்துள்ளனர். கேப்டன் ஜியோர்ஜியோ சியெலினி தொடை எலும்புக் காயத்தால் வெளியேற வேண்டியிருந்தது. வெளியேறுவதற்கு முன்னர் சியெலினி, லோரென்சோ இன்சைனின் இன்ஸ்விங் கார்னர் ஷாட்டுடன் இணைத்து, இரண்டாவது முயற்சியில் ஒரு கோல் அடித்தார். ஆனால் VARக்குப் பிறகு அந்த கோல் அனுமதிக்கப்படவில்லை.

அதன் பின்னர் 29 மற்றும் 52ஆவது நிமிடங்களில் இத்தாலி சார்பாக மானுவல் லோகடெல்லி இரண்டு கோல்களையும், 89ஆவது நிமிடத்தில் சிரோ இம்மொபைல் ஒரு கோலையும் அடித்தார். இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories