December 6, 2025, 2:17 PM
29 C
Chennai

T20: இலங்கை பெற்ற அபார வெற்றி!

icc t20 world cup
நாளைக்கு போகும் நடக்காதுicc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டிகள் 24.10,2021
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்`

ஞாயிற்றுகிழமை அன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஷார்ஜாவில் நடபெற்ற குரூப் 1 ஆட்டம்; இலங்கை அணியும் வங்கதேச அணியும் மோதின. இரண்டாவது ஆட்டம் துபாயில் நடைபெற்ற குரூப் 2 ஆட்டம்; இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.

இலங்கை – வங்கதேசம்

டாஸ் வென்ற இலங்கை அணி வங்கதேச அணியை மட்டையாடச் சொன்னது. வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஆறாவது ஓவரில் 16 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் ஆடவந்த ஷாகிப்-அல்-ஹசன் ஏழு பந்துகளுக்கு பத்து ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் முகம்மது நயீம் (62) முஷ்ஃபிகர் ரஹீமுடன் (57) இணைந்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். வங்கதேச அணி இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது.

பின்னர் ஆடவந்த இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. குசல் பெரைரா நாலாவது பாலில் ஆட்டமிழந்தார். அடுத்த ஏழு ஓவர்களில் நிசாங்காவும், அசலங்காவும் இணைந்து அணியின் ஸ்கோரை விறுவிறு என்று உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்தபோது இரண்டு விக்கட்டுகள் விழுந்தன. அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கட் விழுந்தது. பின்னர் ஆட வந்த பானுகா ராஜபக்ஷே சரித் அசலங்காவுடன் இணைந்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இலங்கை அணி ஐந்து விக்கட்டிற்கு 172 ரன் எடுத்து 18.5 ஓவரில் வெற்றிக்கனியை எட்டியது.

இந்தியா – பாகிஸ்தான்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங்கோடு தொடங்கியது. முதல் ஓவரில் ஹிட் மேன் ரோஹித் அவுட்டானார். மூன்றாவது ஓவரில் ராகுல் அவுட்டானார். ஸ்கோர் எடுக்கவேண்டிய பொறுப்பு கோலியின் தலையில் விழுந்தது. அவர் 57 ரன் எடுத்தார். ரிஷப் பந்த் 39 ரன் எடுத்தார். பிற வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (11), ஜதேஜா (13), ஹார்திக பாண்டியா (எட்டு பந்தில் 11) எடுத்தனர். இறுதியில் இந்தியா இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது.

இந்த ஸ்கோரை பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கட் இழப்பின்றி 152 ரன் எடுத்து வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகம்மது ரிஸ்வான் (79), அணித் தலைவர் பாபர் ஆசம் (68) மிக நன்றாக ஆடினர். பவுலிங்கை விராட் கோலி சரியாகக் கையாளவில்லை. பும்ராவை சரியாகப் பயன்படுத்தவில்லை. பவர் ப்ளே ஓவர்களில் நமது பவுலர்கள் யாரும் விக்கட் எடுக்க முடியவில்லை. அதன் பின்னர் பாகிஸ்தான் மட்டையாளர்கள் சாதாரணமாக ஆடி இலக்கை எட்டினர். இதனால் இதுவரை ஐ.சி.சி டி20 போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெற்றிராத பாகிஸ்தான் அணி முதல் முறையாக வெற்றிப் பெற்றது.

ஆனால் இந்தியாவின் கதை இதோடு முடியவில்லை; பிக்சர் அபி பாக்கி ஹை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories