வட கொரியாவையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்..

வடகொரியாவில் கொரோனா இல்லை என்று சொல்லிவந்த அதிபர் கிம் ஜாங் உன், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

வட கொரியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தப்பி வந்த நிலையில் அங்கும் கொரோனா சமீபநாட்தளாக கோர தாண்டவம் ஆடி உயிர் பலியை ஏற்படுத்தி உள்ளது.

காற்று புகாத இடத்தில்கூட நுழைந்து விடுவேன் என்று சொல்லும்படியாக வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் புகுந்து விட்டது. கடந்த 12-ந் தேதி பியாங்யாங் நகரில் நடந்த ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் இதை அந்த நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் அறிவித்து, உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தி உள்ளார்.இதுவரை தடுப்பூசி நுழைந்திடாத அந்த நாட்டில் கொரோனா பரவல் பேரழிவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

கடந்த மாதம் முழுவதும் நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அங்கு அதிகரிக்கத்தொடங்கியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்தான் ஒமைக்ரான் வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை அங்கும் தன் கைவரிசையை காட்டத்தொடங்கி இருப்பது உறுதியானது.
அங்கு நேற்று முன்தினம் வரை 27 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. நேற்று மேலும் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து விட்டது.இன்று ம் உயிர் பலி உள்ளதாகவே கூறுகின்றனர்.
அங்கு 2 லட்சத்து 96 ஆயிரத்து 180 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு ஊடக நிறுவனம் கே.சி.என்.ஏ. அறிவித்துள்ளது. இதனால் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக உயர்ந்துள்ளதாம்.

2 கோடியே 60 லட்சம் பேர் வாழ்கிற அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் பெரிதாக இல்லை. யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதெல்லாம் உலக அரங்கை கவலைக்குள்ளாக்கி இருக்கின்றன.

கொரோனா தொற்று வடகொரியா வில் பரவல் பற்றி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசித்தார். கொரோனா வெடிப்பை அவர் வரலாற்று ரீதியான எழுச்சி என குறிப்பிட்டார். மேலும் இந்த வெடிப்பை கூடிய சீக்கிரம் நிலைப்படுத்த அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒற்றுமை வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
நேற்று கே.சி.என்.ஏ. கூறுகையில், 13 லட்சத்துக்கும் அதிகமானோர், பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்குவும், சிகிச்சை அளிக்கவும், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளவர்களும், இன்ன பிற அறிகுறிகள் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்” எனவும் தெரிவித்தது.அனைத்து மாகாணங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் என நாடெங்கும் பொது முடக்கம் அமலில் இருப்பதாகவும், உற்பத்தி பிரிவுகள், குடியிருப்புகள் மூடப்பட்டுள்ளதாகவும், அனைத்து மக்களும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்தது.

ஆனாலும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் அதிகாரிகள் பொருளாதார, கட்டுமான, பிற திட்ட பணிகளை தொடரும்படி தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நாட்டுக்கு தென்கொரியாவும், சீனாவும் தடுப்பூசிகளை, மருந்துகளை உதவியாக அனுப்பி வைக்க முன் வந்துள்ளன. ஆனால் இதுபற்றி வடகொரியா தலைமை பகிரங்கமாக பதில் அளிக்கவில்லை.

ஆனாலும் தென் கொரியாவின் உதவிகளை வடகொரியா ஏற்றுக்கொள்ளும் என்று தென் கொரிய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் பார்க் ஜீ வோன் தெரிவித்துள்ளார். அப்படி ஏற்றால் தான் பேரழிவை தடுக்க வாய்ப்பு உண்டாகும்.இந்த வாரத்தின் பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியா செல்ல உள்ள நிலையில், வடகொரியாவில் கொரோனா பரவுவது முக்கிய விவாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்கொரோனா வைரஸ் வடகொரியாவில் அதிகரிப்பதால் மருந்து விநியோகத்தை முறைப்படுத்துவது அவசியம் என வட கொரியாவின் இராணுவத்திற்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

images 2022 05 16T155352.651 - 2026
images 2022 05 16T155409.720 - 2026
226612 new project - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories