December 10, 2025, 5:33 PM
28.7 C
Chennai

வட கொரியாவையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்..

வடகொரியாவில் கொரோனா இல்லை என்று சொல்லிவந்த அதிபர் கிம் ஜாங் உன், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

வட கொரியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தப்பி வந்த நிலையில் அங்கும் கொரோனா சமீபநாட்தளாக கோர தாண்டவம் ஆடி உயிர் பலியை ஏற்படுத்தி உள்ளது.

காற்று புகாத இடத்தில்கூட நுழைந்து விடுவேன் என்று சொல்லும்படியாக வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் புகுந்து விட்டது. கடந்த 12-ந் தேதி பியாங்யாங் நகரில் நடந்த ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் இதை அந்த நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் அறிவித்து, உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தி உள்ளார்.இதுவரை தடுப்பூசி நுழைந்திடாத அந்த நாட்டில் கொரோனா பரவல் பேரழிவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

கடந்த மாதம் முழுவதும் நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அங்கு அதிகரிக்கத்தொடங்கியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்தான் ஒமைக்ரான் வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை அங்கும் தன் கைவரிசையை காட்டத்தொடங்கி இருப்பது உறுதியானது.
அங்கு நேற்று முன்தினம் வரை 27 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. நேற்று மேலும் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து விட்டது.இன்று ம் உயிர் பலி உள்ளதாகவே கூறுகின்றனர்.
அங்கு 2 லட்சத்து 96 ஆயிரத்து 180 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு ஊடக நிறுவனம் கே.சி.என்.ஏ. அறிவித்துள்ளது. இதனால் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக உயர்ந்துள்ளதாம்.

2 கோடியே 60 லட்சம் பேர் வாழ்கிற அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் பெரிதாக இல்லை. யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதெல்லாம் உலக அரங்கை கவலைக்குள்ளாக்கி இருக்கின்றன.

கொரோனா தொற்று வடகொரியா வில் பரவல் பற்றி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசித்தார். கொரோனா வெடிப்பை அவர் வரலாற்று ரீதியான எழுச்சி என குறிப்பிட்டார். மேலும் இந்த வெடிப்பை கூடிய சீக்கிரம் நிலைப்படுத்த அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒற்றுமை வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
நேற்று கே.சி.என்.ஏ. கூறுகையில், 13 லட்சத்துக்கும் அதிகமானோர், பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்குவும், சிகிச்சை அளிக்கவும், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளவர்களும், இன்ன பிற அறிகுறிகள் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்” எனவும் தெரிவித்தது.அனைத்து மாகாணங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் என நாடெங்கும் பொது முடக்கம் அமலில் இருப்பதாகவும், உற்பத்தி பிரிவுகள், குடியிருப்புகள் மூடப்பட்டுள்ளதாகவும், அனைத்து மக்களும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்தது.

ஆனாலும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் அதிகாரிகள் பொருளாதார, கட்டுமான, பிற திட்ட பணிகளை தொடரும்படி தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நாட்டுக்கு தென்கொரியாவும், சீனாவும் தடுப்பூசிகளை, மருந்துகளை உதவியாக அனுப்பி வைக்க முன் வந்துள்ளன. ஆனால் இதுபற்றி வடகொரியா தலைமை பகிரங்கமாக பதில் அளிக்கவில்லை.

ஆனாலும் தென் கொரியாவின் உதவிகளை வடகொரியா ஏற்றுக்கொள்ளும் என்று தென் கொரிய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் பார்க் ஜீ வோன் தெரிவித்துள்ளார். அப்படி ஏற்றால் தான் பேரழிவை தடுக்க வாய்ப்பு உண்டாகும்.இந்த வாரத்தின் பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியா செல்ல உள்ள நிலையில், வடகொரியாவில் கொரோனா பரவுவது முக்கிய விவாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்கொரோனா வைரஸ் வடகொரியாவில் அதிகரிப்பதால் மருந்து விநியோகத்தை முறைப்படுத்துவது அவசியம் என வட கொரியாவின் இராணுவத்திற்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

images 2022 05 16T155352.651 - 2025
images 2022 05 16T155409.720 - 2025
226612 new project - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!

It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

Entertainment News

Popular Categories