திருச்செந்தூர் இராஜகோபுரத்தில் இரவில் ஏறிய நபரால் பரபரப்பு!

thiruchandur 1 - 2026

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இக்கோயிலில், 137 அடி உயரத்தில் ராஜகோபுரம் உள்ளது. இது 9 நிலைகளை கொண்டது. ராஜகோபுரத்தின் மீது 9 கலசங்கள் உள்ளன.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜகோபுரத்தின் கலசத்தின் அருகே மனிதர் ஒருவர் ஏறி அமர்ந்திருப்பதை, கோபுரத்தை தரிசனம் செய்த பக்தர்கள் சிலர் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் திருக்கோயில் பணியாளர்களிடம் கூறினர். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு மீட்பு படையினர், ரோப் கயிறு மற்றும் தார்பாய்களுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராஜகோபுரத்தின் உட்பகுதி படிகள் வழியாக தீயணைப்பு துறையினர் ராஜகோபுரத்தின் மேல் பகுதிக்குச் சென்றனர்.

அங்கு, கலசத்தின் அருகே அமர்ந்து இருந்த நபரிடம் நைசாகப் பேசி பத்திரமாக மீட்டு கீழே இறங்கினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூரைச் சேர்ந்த முத்து என்பது தெரிய வந்தது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

‘நான் பட்டப்படிப்பை பாதியில நிறுத்திட்டேன். இப்போ சிற்ப வேலைகளுக்குச் போறேன். திருச்செந்தூர் கோயில் ராஜகோபுத்தின் சிற்பங்கள், கலசங்கள் பெயிண்ட் அடிக்காம, பாலீஷ் செய்யாம இருந்துச்சு.

பாலிஷ் செய்வதற்காக கோபுரத்தில் உள்ள சிற்பங்களைப் பிடித்து ஒன்றன் மீது ஒன்றாக ஏறி கோபுரத்தின் மேலே ஏறிப் போனேன்’ எனக் கூறினார்.

அவரது பேச்சினால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றனர் போலீஸார். பொதுவாக சிற்ப வேலை பார்ப்பவர்களே கோபுரத்தில் பாதுகாப்பிற்காக கயிறு கட்டித்தான் ஏறுவார்கள்.

இந்த நிலையில், கயிறு ஏதும் கட்டாமல், இரவு நேரத்தில் 137 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறியது பக்தர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories