செல்போன் பயன்படுத்திய பெண்களின் கை துண்டிப்பு; ஆண்களுக்கு சவுக்கடி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறி

ISISபாக்தாத்: ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய பெண்கள் 3 பேரில் கைகளைத் துண்டித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அதே நேரம் ஆண்களுக்கு சவுக்கடி தண்டனை வழங்கியுள்ளனர் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஜுன் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர். அதனைத் தனி நாடாக அறிவித்து, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். மேலும், அந்தப் பகுதிகளில் அவர்கள் பலவித கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களையும் விதித்துள்ளனர். அதில் முக்கியமான ஒன்று மக்கள் தனிப்பட்ட முறையில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது என்பது. மேலும், கடந்த நவம்பர் மாதம் முதல் மொசூல் நகரில் உள்ள அனைத்து செல்போன்களின் நெட்வொர்க்குகளும் முற்றிலுமாக முடக்கப் பட்டு விட்டன. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்கி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து எவரேனும் ரகசியமாக செல்போனில் தகவல் கொடுத்து விடலாம் என்ற அச்சம் பயங்கரவாதிகளிடம் நிலவுகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிப்பட்ட நபர்கள் எவரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று, அங்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டால், அவர்களுக்கு 30 சவுக்கடி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் மொசூல் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதாக ஆண்கள் ஐந்து பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்போன் பயன்படுத்திய 5 ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப் பட்டது. இதே போல், பொதுமக்கள் முன்னிலையிலேயே 3 பெண்களின் கைகள் வெட்டப்பட்டன. அப்பெண்களும் செல்போன் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Entertainment News

Popular Categories