சீனாவில் ஏற்பட்ட படகு விபத்தில் இந்தியர் உள்பட 22 பேர் பலி

Published:

சீனாவில் யாங்ட்ஸி ஆற்றில் 25 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இந்தியர் ஒருவர் உள்பட 22 பேர் உயிரிழந்ததாக சனிக்கிழமை நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்துக்கும், ஜாங்ஜியாகங் மாகாணத்துக்கும் இடையில் பாயும் யாங்ட்ஸி ஆற்றில், இந்தியர் உள்பட எட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், 17 சீனர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது அந்தப் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட எஞ்சிய 22 பேர் உயிரிழந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். உயிரிழந்த இந்திய நபர், சிங்கப்பூரில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் மணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img