ஈராக்கின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து அரசுப் படையினர் அண்மையில் 8 கிராமங்களைக் கைப்பற்றினர். இந்தக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில்தான் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

