இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை

Published:

mangala-samaraveera இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா சனிக்கிழமை நேற்று தில்லி வந்தார். இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மங்கள சமரவீரா முதன்முறையாக இந்தியா வந்துள்ளார்.இந்நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித் பி. பெரேரா, கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியபோது, இந்தியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை கொடுப்போம். இந்தியாவுடனான எங்கள் தனிப்பட்ட நட்பை வலுப்படுத்துவோம். அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லும் அரசாக இலங்கை அரசு இருக்கும் என்று தெரிவித்தார். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த மாதம் வர உள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்தியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img