செப்டம்பர் 18 – இன்று உலக மூங்கில் தினம்

Published:

06 Sep17 World bamboo day - 2026

உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 18 – ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான 10 பில்லியன் டாலர் தொகையில் சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது. 2015 ஆண்டுகளில் இதன் அளவு 20 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6505 கோடியாக உள்ளது எனவும், அது 2015 ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாகவும் இந்திய விவசாயத்துறை அமைச்சகம் கூறுகின்றது.

மூங்கிலை பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வதாரம் என்றும் அழைக்கபடுகின்றது. மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிக அளவு கரியமில வாயுவை ( கார்பன் டை ஆக்சைட் ) எடுத்துக்கொண்டும், அதிக அளவிலான பிராணவாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் மூங்கில் வளர்ப்பில்நம் நாட்டு மக்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை என்பது தான் உண்மை. மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை.

ALSO READ:  FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

நம் நாட்டைப் பொறுத்தவரை, இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண உபயோகத்திற்குத் தான் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள் என்ற அளவில் சில முன்னேற்றம் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூங்கிலைக் கொண்டு கட்டுகின்றனர் என்பது மகழ்ச்சி தரும் செய்தி.

உலக அளவில் தரை, சுவற்றிற்கான ஒட்டுப் பலகை, கூரை கூட மூங்கிலில் செய்கின்றனர் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும். ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் “மார்டிரிட்” நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.

இயற்கை இந்தியாவிற்கு கொடுத்த கொடை “மூங்கில்”. மத்திய அரசாங்கம் “தேசீய மூங்கில் இயக்கம்” (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது. அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

Related articles

Recent articles

spot_img