தாய்லாந்து சுற்றுலா கப்பலில் தீ: 110 பேர் பத்திரமாக மீட்பு

Published:

பாங்காக்: அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய, தாய்லாந்தின் தென்மேற்கு கடற்பகுதியில் தாய்லாந்து சுற்றுலா கப்பல் ஒன்று புதன்கிழமை இன்று திடீரென தீப் பிடித்தது. ஆயினும் அதில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக அவர்களில் பெரும்பான்மையாக இருந்த வெளிநாட்டவர்கள் பத்திரமாக கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர். தாய்லாந்தின் புகழ்பெற்ற இரண்டு கடற்கரை சுற்றுலா தலங்களான கிராபியில் இருந்து புக்கெட் சென்று கொண்டிருந்தது ஓ நாங் பிரின்ஸஸ் 5 ஃபெரி கப்பல். அப்போது இது தீ விபத்தில் சிக்கியது. உடனே மாற்றுக் கப்பல் மூலம், 110 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, க்ராபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தை செல்போன்கள், கேமராக்களில் படம் பிடித்துக் கொண்டுள்ளனர். இதனை காவல் துறை கலோனியல் சொம்பொங் திப்-அபகுல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர், எனினும் விபத்துக்கான முழு விவரமும் தெரியவராது, காரணம் அந்தக் கப்பல் நீரில் மூழ்கிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

Related articles

Recent articles

spot_img