சீன எல்லையில்… சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையம் திறப்பு!

Published:

modi - 2026சீன எல்லையில் இருந்து சுமார் 60 கி.மீ., தொலைவில், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப் பட்டது.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாக்யாங் நகரில் 201 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் பயணிகளைக் கையாளும் வசதி கொண்ட விமான நிலையத்தை அமைக்க ரூ.553 கோடி செலவிடப் பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியில் போக்குவரத்து தொடங்குகிறது. அன்று இந்த விமான நிலையத்திற்கு முதல் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், இந்தியப் பொறியாளர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

pongyok airport - 2026

மலைப்பகுதியில் புதிய தொழில்நுட்ப உதவியுடன் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து 60 கி.மீ., தொலைவில்தான் சீன எல்லை உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதில் ராணுவ விமானங்களையும் தரை இறக்கலாம். அதற்கான வசதி உள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img