ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் நள்ளிரவு நிலநடுக்கம்

Published:

ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியிருந்தது. இதனால் பாகிஸ்தானி்ன் பெஷாவர் நகரில் பாதிப்பு ஏற்பட்டது. பெஷாவரில் இந்த நிலநடுக்கத்தி்ன் காரணமாக வீடுகள் சேதமடைந்தன.

ஆப்கனிஸ்தானில், நேற்று நள்ளிரவு 11.44-க்கு அந்நாட்டின் தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. சுமார் ஒரு நிமிடம் வரை இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதனால் சுமார் 30 பேர் வரை படுகாயமடைந்துளளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img