கொழும்பு: இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13வது சட்டத் திருத்தம் தொடர்பான நடவடிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் அதிபர் மாளிகையில், பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரிவுத் தலைவர்கள் மத்தியில் பேசிய சிறிசேன, தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண தமது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று கூறினார். அண்மையில் இலங்கை சென்ற நரேந்திர மோடி, 13வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். 19 ஆவது சட்டத் திருத்தம் அடுத்த வாரம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்ட சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றார். இந்த சட்டத் திருத்தம் அதிபரின் பதவிக்காலம், அதிகாரம் தொடர்புடையது. மேலும் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வந்த தமிழ் அமைப்புகள் தற்போது, இலங்கையின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்குப் பிறகே 13வது சட்டத் திருத்த நடவடிக்கை: அதிபர் சிறிசேன
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

