ஈரானின் சபாஹர் துறைமுக நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது இந்தியா!

Published:

iran chabahar port - 2026
ஈரானில் இந்திய நிதி உதவியில் அமைந்த சபாஹர் துறைமுக திறப்பு விழாவில்…

பாகிஸ்தானின் நிலத்தை பயன்படுத்தாமல், கடல் வழியாகக் கடந்து சென்று ஈரான், ஆப்கன் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா கட்டமைத்த ஈரானின் சாபஹர் துறைமுக நிர்வாகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

இதற்காக இந்திய அரசால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம்

ஈரான் அதிகாரிகள் துறைமுகத்தின் பொறுப்புகளை

ஒப்படைத்தனர்.

பாகிஸ்தான் எல்லையைத் தொடாமல் கடல் வழியாக ஆப்கானுக்கு இந்திய கப்பல்கள் செல்ல இது வழி செய்கிறது. யூரியா, மெத்தனால், தார், இரும்பு, ரசாயனங்கள் உள்ளிட்ட

பொருட்களை ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கூடுதல்

கட்டணமின்றி இந்தப் பாதை வழியாக ஏற்றுமதி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு.

இதற்கு பதிலாக, இந்தியாவில் இருந்து அரிசி, தேயிலை, கார்பன், காகிதம், அலுமினியம் ஆக்சைட், மருந்துகள் போன்றவை ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img