ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த திருமணத்திற்கு ஆகும் செலவுகள் மற்றும் புதிய வீடுகளில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமே செலவு செய்யும் எனவும் அந்த அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆயுள் தண்டனைக்கூட விதிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரித்திரியா நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இந்த அதிரடி உத்தரவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

