ஈரான் அதிபருக்கு எதிராக தூக்கு கயிற்றில் தொங்கி போராட்டம்

Published:

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கண்டித்து பெண்ணுரிமை அமைப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர் போலியான தூக்கு கயிற்றில் தொங்கியவாறு அரைநிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார்.

இந்த போராட்டம் குறித்து அவர் கூறியதாவது, ஈரான் நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கின்றன, ஒவ்வொரு ஆண்டும் 800 பேருக்கும் அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றன, இது தொடர்பான வன்முறைகளுக்கு எதிரான தீர்வுகள்  ஈரான் அதிபர் ஹசன் ருஹானி ஆட்சியில் மேம்படுத்தப்படவில்லை.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில், பெண்ணுரிமைவாதிகள், பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்களும் அடங்குவர், தனிப்பட்ட சிந்தனையுடையவர்கள் என்ற காரணத்தினாலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் ஜனாதிபதியை வரவேற்றுள்ள, பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டேவுக்கு மனித உரிமை மீறல்கள் முக்கியமில்லை, அவருக்கு பொருளாதார ஒப்பந்தங்கள் மட்டுமே முக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img