சமூக வலைத்தள நிபுணர்களின் தொடர் கண்காணிப்பினாலும், டிவிட்டரில் அதிக பயன்பாடு இருந்த கணக்குகளைக் கண்காணித்ததிலும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தொடர்புடைய 10 ஆயிரம் டிவிட்டர் சமூகக் கணக்குகள் ஒரே நாளில் முடக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், தங்கள் கணக்குகள் முடக்கப்பட்ட விவரத்தை அதன் பயனாளிகள் அடிக்கடி பரிமாறிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் வெளியிட்ட ட்விட்டர் நிறுவன தொடர்பாளர் ஒருவர், கடந்த ஏப்.2ம் தேதி பயங்கரவாத அச்சுறுத்தல் செய்திகளைப் பகிர்ந்து கொண்ட கணக்குகள் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும் இன்னும் 90 ஆயிரம் கணக்குகள் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் தொடர்பில் உள்ளவர்களின் பெயர்களில் இயங்குகின்றனவாம்…
ஒரே நாளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 10 ஆயிரம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari