நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Published:

earh-quake-delhi புது தில்லி: இன்று முற்பகல் 11.56 மணி அளவில் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவை நிலநடுக்கம் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. நேபாளத்திலும், தில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தை ஒட்டி, உடனடியாக மீட்புக் குழுக்கள் உதவிக்கு இறங்கின. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வடமாநிலங்கள், தமிழகம் ஆகியவற்றைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நேபாளம், இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லாகூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்துக் கூறிய அமெரிக்க நில ஆய்வு மையம், உள்ளூர் நேரப்படி 11.56க்கு ஏற்பட்ட இது 7.5 இல் இருந்து 7.9 ஆகப் பதிவாகியிருப்பதாகவும், தரையில் இருந்து 11 கி.மீ. தொலைவில் இது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

Related articles

Recent articles

spot_img