காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தின் பேரழிவில் இருந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் ஒரு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீட்பு பணிகள் சிறிது பாதிக்கப்பட்டன. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

