காத்மாண்டு: நேபாளத்தில் சனிக்கிழமை நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2500ஐத் தாண்டியுள்ளது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்திய அரசு மீட்புப் பணியில் நேபாளத்துக்கு உதவி வருகிறது. இந்நிலையில், இந்த பூகம்பத்தில் 2500 பேர் வரை பலியாகியுள்ளனர். பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் ஏற்பட்டு அந்நாட்டு மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், காத்மாண்டுவை மையமாக வைத்து அங்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவானது.

